Please enable javascript.IOCL Recruitment 2019,இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்! விண்ணப்பிக்க ந. 22 கடைசி நாள்! - indian oil pipeline division invites application for various apprentice posts in iocl recruitment 2019 - Samayam Tamil

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்! விண்ணப்பிக்க ந. 22 கடைசி நாள்!

Samayam Tamil | 22 Nov 2019, 12:03 pm
Subscribe

IOCL Recruitment 2019: Indian Oil Corporation Limited இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு பயிற்சி பணிகளை அறிவித்துள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

IOCL Recruitment 2019
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு சுமார் 380 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடேட் (Indian Oil Corporation Limited IOCL) https://plis.indianoilpipelines.in நிறுவனத்தில் இருந்து அக்டோபர் 31 ஆம் தேதி அப்ரண்டிஸ் பயிற்சி அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பைப்லைன் பிரிவுகளில் (IOCL Pipeline) மொத்தம் 380 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என மண்டலங்கள் வாரியாக பைப்லைன் பிரவுக்கு பயிற்சி வேலைவாய்ப்பு உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தெற்கு மண்டலத்தின் கீழ் வருகிறது. தமிழகத்தில் 19 காலியிடங்களும், கர்நாடகாவில் 3 பணியிடங்களும், ஆந்திராவில் 3 காலியிடங்களும் உள்ளது. தமிழகத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், T&I,மனிதவள மேம்பாடு, அக்கவுண்ட்ஸ்/பைனான்ஸ், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், டொமேஸ்டிக் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிகள் உள்ளது.
கல்பாக்கம் அணு சக்தி துறையில் வேலைவாய்ப்பு!

IOCL Pipeline Apprentice 2019
வயது வரம்பு:
31.10.2019 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமக 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
டேட்டா ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட துறையில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு (Diploma) படித்திருக்க வேண்டும். Human Resource பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
undefined

தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு கொள்குறி வினாக்கள் அடிப்படையில் இருக்கும். மொத்தம் 100 கேள்விகள், 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். நெகட்டிவ் மார்க் கிடையாது. டிசம்பர் 8 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம் பற்றிய விபரங்கள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த IOCL Pipeline Apprentice 2019 பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://plis.indianoilpipelines.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து வரும் நவம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
https://plis.indianoilpipelines.in/PLApprentice/Admin/Advertisement%20File%20Upload/5.pdf
உங்கள் கருத்தை பதிவு செய்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்